இந்திய அணியின் ரோகித் சர்மா உலக சாதனை படைத்தார்

இந்திய அணியின் ரோகித் சர்மா உலக சாதனை படைத்தார்

63137

நவம்பர் 14, இலங்கைக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் ரோகித் சர்மா 2வது முறையாக இரட்டை சதம் அடித்ததுடன், 264 ரன் குவித்து ஒருநாள் அரங்கில் அதிக ரன் விளாசிய வீரர் என்ற புதிய உலக சாதனை நிகழ்த்தினார். 33 பவுண்டரி அடித்து அதிலும் உலக சாதனை படைத்தார். இவரது அதிரடியில் 404 ரன் குவித்த இந்திய அணி, இலங்கையை வீழ்த்தி 4,0 என முன்னிலை பெற்றுள்ளது.

இதற்கு முன், இந்தியாவின் சச்சின் 2010ல் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 200 ரன் எடுத்த போது 25 பவுண்டரி அடித்தார். சேவக் 2011ல் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 219 ரன் எடுத்த போது 25 பவுண்டரி அடித்தார். சீனியர்களின் இரண்டு சாதனையையும் நேற்று முறியடித்த ரோகித் 33 பவுண்டரிகளை விளாசி உள்ளார்.