நாடு முழுவதும் இன்று வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்

நாடு முழுவதும் இன்று வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்

21bank21

நவம்பர் 12, நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கி ஊழியர்கள், ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர். ஊழியர்கள் சங்கம் சார்பில் 25 சதவீத சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், வங்கி நிர்வாகத்தின் உயரிய அமைப்பான இந்தியன் வங்கிகள் சங்கம், 11 சதவீத ஊதிய உயர்வுதான் அளிக்க முடியும் என்று கூறியது.

இதனால், 12-ந்தேதி (இன்று) நாடு முழுவதும் பொதுத்துறை வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டது.