தனசேகரனின் சிகிச்சைக்காக 70,973.30 ரிங்கட் நிதியுதவி : ம.இ.கா தேசிய இளைஞர் பிரிவு வழங்கியது

தனசேகரனின் சிகிச்சைக்காக 70,973.30 ரிங்கட் நிதியுதவி : ம.இ.கா தேசிய இளைஞர் பிரிவு வழங்கியது

aaaa

ம.இ.கா தேசிய இளைஞர் பிரிவு தலைவர் திரு. சிவராஜ் சந்திரனால் துவங்கப்பட்ட தனசேகரன் பெஞ்சமின் என்ற 9 வயது சிறுவனின் சிகிச்சைக்காக நிதி திரட்டுதல் ம.இ.கா இளைஞர் பிரிவினரால் செயல்படுத்தப்பட்டது. ஒரு மாதத்திற்குள்ளாக  70,973.30 ரிங்கட் நிதியை ம.இ.கா இளைஞர் பிரிவினர் திரட்டி அந்த நிதியை தனசேகரன் பெஞ்சமினடம் இன்று 29/09/2014 அளித்தனர். அந்த சிறுவன் மேல்சிகிச்சைக்காக இந்தியா செல்லவிருப்பதாகவும் அதற்கு 75,000.00 ரிங்கட் நிதி உதவி தேவை எனவும் நிதி திரட்ட துவங்குகையில் திரு. சிவராஜ் அறிவித்திருந்தார்.

இத்தனை குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய தொகையை நிதியாக வசூலித்த ம.இ.கா இளைஞர் பிரிவினருக்கும் நிதி அளித்தவர்களுக்கு ம.இ.கா தேசிய இளைஞர் பிரிவு செயலாளர் திரு. அரவிந்த் கிருஷணன் வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார். அந்த சிறுவனுக்காக அனைவரும் பிரார்த்தனை செய்வோம் என்றும்  ம.இ.கா தேசிய இளைஞர் பிரிவு செயலாளர் திரு. அரவிந்த் கூறினார்.