தமிழக கால்பந்தாட்டக்கழக புதிய நிர்வாகிகள் தேர்வு.

தமிழக கால்பந்தாட்டக்கழக புதிய நிர்வாகிகள் தேர்வு.

6

தமிழக கால்பந்து கழகத்தின் பொதுக்குழுக்கூட்டம் சேலத்தில் நடைபெற்றது. இதில் 2014-2018 ஆண்டிற்கான நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. இதில், தமிழக கால்பந்து கழக தலைவராக தூத்துக்குடி மாவட்ட கால்பந்து தலைவர் சேசையா வில்லவராயர் வெற்றி  பெற்றார். மேலும், துணைத் தலைவர்களாக ஈரோடு மாவட்ட கால்பந்து கழக தலைவர் பால சுப்பிரமணியன், மதுரை மாவட்டகால்பந்து கழக தலைவர் தனுஷ்கோடி, கடலூர் மாவட்ட கால்பந்து கழக செயலர் ராதாகிருஷ்ணன், திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழக தலைவர் சுந்தர்ராஜன், நீலகிரி மாவட்ட கால்பந்து கழக செயலர் மணி ,பொருளாளராக நாகப்பட்டினம் மாவட்ட கால்பந்து கழக செயலர் கண்ணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.