தமிழக மீனவர் காவல் நீட்டிப்பு.

தமிழக மீனவர் காவல் நீட்டிப்பு.

7

இராமேஸ்வரத்தில் இருந்து கடந்த  9 மற்றும் 11- ம்  தேதி மீன்பிடிக்கச்  சென்ற போது 8 படகுடன் 36 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டனர். சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களை செப்.24- ம்தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர்களது நீதிமன்ற காவல் முடிவடைந்ததைத் தொடர்ந்து அவர்கள் மீண்டும் இலங்கையில் உள்ள மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களைவிசாரித்த நீதிபதி ஆனந்தி கனக ரெத்தினம் அவர்களை அக்.7-ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் மீண்டும் அனுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர்.