அரசு பணியில் சேருவதற்கான வயது வரம்பு உயர்வு: முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவு.

அரசு பணியில் சேருவதற்கான வயது வரம்பு உயர்வு: முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவு.

ind1

ஆந்திராவில் மாநில அரசு பணியில் சேருவதற்கான வயது வரம்பு 34 ஆக இருந்தது. இந்நிலையில் ஆந்திராவில் காலியாக உள்ள அரசு பணியிடங்களில் ஆட்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 4 ஆண்டுகளாக அரசு வேலைவாய்ப்பு இல்லாத காரணத்தால் 34 வயதை தாண்டிய இளைஞர்களுக்கு சலுகை அளிக்கும் வகையில் அரசு பணிக்கான வயது உச்சவரம்பு தற்போது 40 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகள் வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.