பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்தில் 4 பேர் பலி.

பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்தில் 4 பேர் பலி.

4

உத்தரப்பிரதேசம் லக்னோ மாவட்டத்தின் மோகன்லால்காங் என்ற இடத்தில் இயங்கி வரும் பட்டாசு தொழிற்சாலையில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புப் படையினர், கடுமையாக போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த வெடிவிபத்தில் 4 பேர் பலியாகியுள்ளனர். படுகாயமடைந்த 10-க்கு மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.