புத்ராஜெயா, 30 ஆகஸ்ட் 2026 : 2026ஆம் ஆண்டு தேசிய தின அணிவகுப்பில் பங்கேற்பதற்காக மலேசிய சுகாதார அமைச்சின் (KKM) அணிவகுப்பு குழு முழு ஒத்திகையில் பங்கேற்றது. ஆகஸ்ட் 31ஆம் தேதி புத்ராஜெயா சதுக்கத்தில் நடைபெறவுள்ள தேசிய தினக் கொண்டாட்டத்தின் அணிவகுப்பில் சுகாதார அமைச்சின் குழு பங்கேற்கவுள்ளது.
அணிவகுப்பின் போது குழுவினரின் ஒவ்வொரு அசைவும், அணிவகுப்பு அமைப்பும், ஒருங்கிணைப்பும் ஒழுங்காகவும் சீராகவும் நடைபெறுவதை உறுதி செய்வதற்காக இந்த முழு ஒத்திகை நடத்தப்பட்டது. மேலும், ஒத்திகை மூலம் சுகாதார அமைச்சின் பணியாளர்களிடையே தேசப்பற்று, ஒற்றுமை மற்றும் நாட்டின் மீதான அன்பை மேலும் வலுப்படுத்தும் வாய்ப்பும் ஏற்பட்டது.



“மக்களின் ஆரோக்கியத்திற்காக உதவ நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்ற உறுதியுடன் தேசிய தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்க சுகாதார அமைச்சின் அணிவகுப்பு குழு தயாராகியுள்ளது. ஆகஸ்ட் 31ஆம் தேதி புத்ராஜெய்ரா சதுக்கத்தில் நடைபெறும் தேசிய தினக் கொண்டாட்டத்தில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு தேசப்பற்று மற்றும் ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்துமாறு சுகாதார அமைச்சு அழைப்பு விடுத்துள்ளது.







