என் தமிழ்

69ஆவது தேசிய தினம் : முந்தைய தலைமுறையினரின் தியாகங்களை நினைவுகூர்வோம் – கோபிந்த் சிங் டியோ

கோலாலம்பூர், 31 ஆகஸ்ட் 2026 : 69ஆவது தேசிய தினம் மற்றும் மலேசிய தினத்தை முன்னிட்டு மலேசிய மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பப்பரைடு வரமன், நாட்டின் முன்னேற்றத்திற்கும் எதிர்கால வளர்ச்சிக்கும் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

சுதந்திரம் என்பது நாட்காட்டியில் இடம்பெறும் ஒரு தேதியை மட்டும் குறிக்காது என்றும், அது மலேசிய மக்களின் போராட்டம், தியாகம் மற்றும் ஒற்றுமையின் அடையாளம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பல்வேறு இனங்கள், மதங்கள் மற்றும் கலாசாரங்களைக் கொண்ட நாடாக மலேசியா திகழ்வதால், மக்களிடையே நிலவும் வேறுபாடுகளை மதித்து, நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் தொடர்ந்து வலுப்படுத்துவது அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனைவரும் ஒன்றிணைந்து மிகவும் முன்னேறிய, அமைதியான மற்றும் வளமான மலேசியாவை உருவாக்க பாடுபட வேண்டும் என்றும் பப்பரைடு வரமன் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், ஒவ்வொரு மலேசியரின் உள்ளத்திலும் தேசப்பற்று உணர்வு தொடர்ந்து வளர வேண்டும் என்றும், அது நாட்டின் சிறந்த எதிர்காலத்தை நோக்கி மக்கள் ஒன்றிணைந்து பயணிப்பதற்கான வலிமையாக அமைய வேண்டும் என்றும் அவர் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

“நம்மிடமிருந்து, மலேசியாவுக்காக” என்ற உணர்வுடன், அனைத்து மலேசியர்களுக்கும் 69ஆவது தேசிய தினம் மற்றும் மலேசிய தின நல்வாழ்த்துகளை பப்பரைடு வரமன் தெரிவித்துள்ளார்.

Scroll to Top