16 மே 2026 : ஐந்து நாடுகள் சுற்றுப்பயணத்தின் இரண்டாம் கட்டமாக பிரதமர் Narendra Modi நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டர்டாம் நகரை சென்றடைந்தார். அங்கு அவரை நெதர்லாந்து அரசின் உயரதிகாரிகள் சிறப்பாக வரவேற்றனர். குறிப்பாக, நெதர்லாந்து மன்னரின் இராணுவ இல்லத் துறைத் தலைவரும் அட்ஜுடண்ட் ஜெனரலுமான லட்ஜர் ப்ரும்மெலார் விமான நிலையத்தில் மோடியை நேரில் வரவேற்றார்.
இந்த பயணத்தின் போது நெதர்லாந்து பிரதமருடன் மோடி முக்கிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். வர்த்தகம், தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், பாதுகாப்பு மற்றும் செமிகண்டக்டர் துறைகளில் இருநாட்டு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. மேலும், இந்திய வம்சாவளியினரையும் பிரதமர் சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





