15 ஏப்ரல் 2026 : 1912ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதி, உலக வரலாற்றில் மிகப் பெரிய கடல் விபத்துகளில் ஒன்றாகக் கருதப்படும் RMS Titanic கப்பல் வட அத்திலாந்திக் பெருங்கடலில் மூழ்கியது. தன் முதல் பயணமாக இங்கிலாந்தின் சவுதாம்ப்டனில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க்கு சென்றுகொண்டிருந்த இந்த ஆடம்பரக் கப்பல், ஏப்ரல் 14ஆம் தேதி இரவு ஒரு பனிக்கட்டியுடன் மோதியது. அதன் பின்னர் சுமார் 2 மணி 40 நிமிடங்களில் கப்பல் முழுமையாக கடலுக்குள் மூழ்கியது.
அந்த நேரத்தில் கப்பலில் இருந்த 2,200க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் பணியாளர்களில் சுமார் 1,500க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளில் குறைபாடுகள், குறிப்பாக அனைவருக்கும் போதுமான உயிர்காக்கும் படகுகள் இல்லாமை, இந்த விபத்தில் உயிரிழப்பை அதிகரித்த முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
இந்த துயர சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், கடல் பாதுகாப்பு விதிகளில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியது. பின்னர் கடல் பயண பாதுகாப்பை மேம்படுத்த பல புதிய சர்வதேச விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டன. டைட்டானிக் விபத்து இன்று வரை மனித வரலாற்றில் நினைவுகூரப்படும் மிகப்பெரிய கடல் பேரழிவுகளில் ஒன்றாக திகழ்கிறது.





