பிடித்த வேடம் தந்தால் இலவசமாக நடிப்பேன் ஓவியா

பிடித்த வேடம் தந்தால் இலவசமாக நடிப்பேன் ஓவியா

Oviya

பிடித்த வேடம் தந்தால் இலவசமாக நடிப்பேன் என்கிறார் ஓவியா.ஹீரோயின்கள் தங்களது சம்பளத்தை ஹீரோவுக்கு சமமாக உயர்த்திக் கொண்டிருக்கின்றனர். கேட்கும் சம்பளம் தராவிட்டால் அப்படத்தை கைகழுவுகின்றனர். இந்த நிலையில் சம்பளம் வாங்காமலே நடிக்க தயார் என்று அறிவித்திருக்கிறார் ஓவியா. ‘களவாணி‘, ‘கலகலப்பு‘, ‘மெரினா‘ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கும் ஓவியா இதுபற்றி கூறியதாவது:முடிந்தவரை ரசனைக்குரிய கதாபாத்திரங்களில் நடிக்கவே ஆசைப்படுகிறேன். பணம் மட்டுமே என்னுடைய குறிக்கோள் இல்லை. எனக்கு பிடித்த ஸ்கிரிப்ட்டாக இளருந்தால் ஒரு பைசா கூட வாங்காமல் இலவசமாக நடிக்க தயார். மேக் அப் உதவியாளர்களை மட்டும் தயாரிப்பாளர் தந்தால் போதும். தமிழில் தற்போது சரத்குமார் நடிக்கும் ‘சண்டமாருதம்‘, பாரதிராஜா இயக்கும் படம் உள்ளிட்ட சில படங்களில் நடிக்கிறேன். ‘இலவசமாக நடிப்பது உறுதியா?‘ என கேட்கிறார்கள். கேரக்டர் பிடித்தால் நிச்சயம் அப்படி நடிப்பேன். மற்ற வேடங்களில் நடிக்க வழக்கம் போல் நான் வாங்கும் சம்பளத்தை பெற்றுக் கொள்வேன். இவ்வாறு ஓவியா கூறினார்.