சந்தைமலேசியா

உலக பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் ஆற்றலை மலேசியா கொண்டுள்ளது

கோலாலம்பூர், 05/05/2025 : நாட்டின் வலுவான மற்றும் மீள்தன்மை கொண்ட பொருளாதார அடிப்படையில், அமெரிக்காவின் பரஸ்பர வரி தொடர்பான அறிவிப்பினால் ஏற்பட்டிருக்கும் உலக பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் ஆற்றலை மலேசியா கொண்டுள்ளது.

முறையான மற்றும் திட்டமிடப்பட்ட பொருளாதார அணுகுமுறை மூலம், இந்த சவாலை எதிர்கொள்ள முடியும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நம்பிக்கைத் தெரிவித்தார்.

“2024-ஆம் ஆண்டில் 5.1% மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை வெற்றிகரமாகப் பதிவு செய்துள்ளோம். நிதிப் பற்றாக்குறையை (2022) 5.5%-இலிருந்து (2023) 5%, பின்னர் (2024) 4.1% ஆகக் குறைத்து வருகிறோம். மேலும் 2025 ஆம் ஆண்டிற்கான அதன் கணிப்பு 3.8% என்ற விகிதத்தில் உள்ளது,” என்றார் அவர்.

மடானி பொருளாதார கட்டமைப்பின் கீழ் செயல்படுத்தப்படும் சீர்திருத்தங்கள், மீள்தன்மையுடனும், உலக பொருளாதாரத்தின் நிச்சயமற்ற தன்மைகளை எதிர்கொள்ளத் நாடு தயாராக இருப்பதை உறுதி செய்ய உதவும் என்று அவர் விளக்கினார்.

உள்நாட்டுப் பொருளாதாரத்தின் வலிமை, வெளிப்புற தாக்கத்தை தாங்கும் ஆற்றலை மலேசியாவை வழங்கியிருப்பதாகவும் அன்வார் குறிப்பிட்டார்.

Source : Bernama

#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews