மலேசியா – அமெரிக்கா இடையிலான வர்த்தக உறவு வலுவாக உள்ளது
கோலாலம்பூர், 05/05/2025 : மலேசியா-அமெரிக்கா-விற்கு இடையிலான வர்த்தக உறவுகள், தொடர்ந்து வலுவானதாகவும் முன்னேற்றப் பாதையிலும் உள்ளன.
2024-ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கு இடையிலான மொத்த வர்த்தகம் 32,500 கோடி ரிங்கிட்டை எட்டிய நிலையில், அந்த எண்ணிக்கை, மலேசியாவின் மொத்த வர்த்தகத்தில் 11 விழுக்காட்டிற்கு சமமானது என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
19,900 கோடி ரிங்கிட் மதிப்புள்ள மலேசியப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் மிகப் பெரிய நாடாக அமெரிக்கா உள்ளதாகவும், நாட்டின் மொத்த ஏற்றுமதியில், 13 விழுக்காடு ஆகும் என்று நிதி அமைச்சருமான டத்தோ ஶ்ரீ அன்வார் கூறினார்.
இதனிடையே, அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மதிப்பு, 12,600 கோடி ரிங்கிட்டை எட்டிய நிலையில், இது மலேசியாவின் மொத்த இறக்குமதியில் 9 விழுக்காட்டிற்கு சமம் என்றும் அவர் கூறினார்.
“மொத்த அமெரிக்கா முதலீடு 16,600 கோடி ரிங்கிட் ஆகும். இந்நாட்டில் இரண்டு லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது. அமெரிக்காவில் அங்கீகரிக்கப்பட்ட மலேசிய முதலீடுகள் 3,500 கோடி ரிங்கிட்டிற்கும் அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஆற்றல், இரசாயனம், உணவு, தளவாடங்கள் மற்றும் உயர் தொழில்நுட்பங்களை உட்படுத்தியுள்ளது,” என்றார் அவர்.
மலேசியாவிற்கு அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு மலேசியா 47 விழுக்காடு வரி விதித்தாக அமெரிக்கா கூறியதை அன்வார் மறுத்துள்ளார்.
Source : Bernama
#USAMalaysia
#USAImportTax
#PmAnwar
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews