KWSP அறிவிப்பு; மடானி அரசாங்கத்தின் வளர்ச்சி & முதலீட்டாளர்களின் நம்பிக்கையைக் காட்டுகிறது
கோலாலம்பூர், 02/03/2025 : ஊழியர் சேம நிதி வாரியம் KWSP-இன் அறிவிப்பானது மடானி அரசாங்கத்தின் வளர்ச்சியையும், முதலீட்டாளர்களின் கொள்கை அடிப்படையிலான நம்பிக்கையையும் பிரதிபலிப்பதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கோடி காட்டியுள்ளார்.
2024ஆம் ஆண்டுக்கான சேமிப்பு தொகைக்கு, 6,305 கோடி ரிங்கிட் தொகையில் 6.30 விழுக்காடு லாப ஈவு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், 1,019 கோடி ரிங்கிட் தொகையில் ஷரியா சேமிப்பு தொகைக்கும் 6.30 விழுக்காடு லாப ஈவை KWSP அறிவித்துள்ளதை அவர் வரவேற்றுள்ளார்.
இதன்வழி, 2024-ஆம் ஆண்டிற்கான விநியோக தொகையின் மொத்த மதிப்பு 7,324 கோடி ரிங்கிட்டாகும்
2017ஆம் ஆண்டிற்குப் பிறகு மிகப் பெரிய லாப ஈவு தொகையாக கருதப்படுகிறது.
இவ்வாண்டு ஊழியர் சேமநிதி வாரியத்தின் லாப ஈவு விழுக்காடு, வரலாற்றில் மிக உயர்ந்த தொகையான 7,324 கோடி ரிங்கிட்டுடன் சிறந்த நிலையில் உள்ளதை
பிரதமர் தமது முகநூலில் பாராட்டி பதிவிட்டுள்ளார்.
பொருளாதாரத்தின் மீதான நம்பிக்கையை அதிகரிப்பதன் மூலம், நாடு முழு அர்ப்பணிப்புடன் முன்னேறி பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்ய முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Source : Bernama
#KWSP
#PMAnwar
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews