கோலாலம்பூர், 07/10/2024 : நாட்டின் செம்பனை தொழில் தொடர்ந்து வலுவூட்டபடுவதை மடானி அரசு உறுதி செய்யும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
அக்டோபர் 18ஆம் தேதி, 2025-ஆம் ஆண்டுக்கான வரவுச் செலவு திட்டம் தாக்கல் செய்யப்படுவதற்கு முன் நாட்டிலுள்ள தொழில் துறையினர் உட்பட சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரின் கருத்துகளையும் கேட்க அரசாங்கம் தொடர்ச்சியான கருத்து பரிமாற்ற அமர்வுகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.
அதில், வெளிநாட்டு தொழிலாளர்கள் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் குறைந்த செம்பனை உற்பத்தி விகிதம் உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், நாட்டின் திடமான செம்பனை உற்பத்தியை உறுதி செய்யும் திட்டத்தில் அதன் தொடர்பான நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கான முயற்சிகள் விவாதிக்கப்பட்டு வருவதாக நிதியமைச்சருமான டத்தோ ஶ்ரீ அன்வார் தமது X பக்கத்தில் தெரிவித்தார்.
Source : Bernama
#PalmEstate
#Anwar
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#Malaysia
Comments are closed, but trackbacks and pingbacks are open.