GISBH: விசாரணையைப் பொறுத்தே கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கையில் மாற்றம் – உள்துறை அமைச்சர்

GISBH: விசாரணையைப் பொறுத்தே கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கையில் மாற்றம் - உள்துறை அமைச்சர்

பண்டார் பாரு, 05/10/2024 : GISBH நிறுவனம் தொடர்பான வழக்கு விசாரணை சட்ட விதிகளின் பல்வேறு கோணங்களில் விரிவாக மேற்கொள்ளப்பட்டு வருவதால் விசாரணையின் தேவைகளைப் பொறுத்து கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை அவ்வப்போது மாறுகிறது.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸ் உறுப்பினர்கள் உட்பட ஆலோசனை மற்றும் உளவியல் நிபுணர்களும் இந்த விசாரணையில் ஈடுபட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

”எண்களின் அடிப்படையில் அது வேறுப்பட்டது. ஏனெனில் ஒவ்வொரு விசாரணையும் புதிய கண்டறிதலை உருவாக்கும்; அது முதலாவது. இரண்டாவதாக, போலீஸ் விசாரணை ஜாக்கிமின் கீழ் உள்ள மத அமைச்சர் மற்றும் மாநில மத அதிகாரத்தின் பொறுப்பிலிருந்து வேறுபடுத்தப்பட வேண்டும்”, என்று அவர் கூறினார்.

இன்று, கெடா, பெர்மாதாங் பாசிர் தேசிய ஆரம்பப்பள்ளியில் நடைபெற்ற அமைச்சுடனான சந்திப்பு நிகழ்ச்சியின் போது டத்தோ ஶ்ரீ சைஃபுடின் செய்தியாளர்களிடம் பேசினார்.

Source : Bernama

#GISBH
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#Malaysia

Comments are closed, but trackbacks and pingbacks are open.