பாகிஸ்தான் சென்றடைந்தார் டத்தோ ஶ்ரீ அன்வார்

பாகிஸ்தான் சென்றடைந்தார் டத்தோ ஶ்ரீ அன்வார்

இஸ்லாமாபாத், 03/10/2024 : பாகிஸ்தானுக்கு மூன்று நாட்கள் பயணம் கொண்டிருக்கும் டத்தோ ஶ்ரீ அன்வார் இன்று வியாழக்கிழமைஇஸ்லாமாபாத் சென்றடைந்தார்.

அவரை ஏற்றிச் சென்ற சிறப்பு விமானம் மலேசிய நேரப்படி இரவு மணி 10.55-க்கு ரவால் பின்டி, நூர் கான் விமான தளத்தில் தரையிறங்கியது.

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷாரிஃப்  விமான தளத்தில் அன்வாரை வரவேற்றார்.

அவருடன் பாகிஸ்தானின் வர்த்தக அமைச்சர் ஜமால் கமால் கான், மலேசியாவிற்கான பாகிஸ்தான் உயர் ஆணையர் சைட் அஃசான் ரஸா ஷா ஆகியோரும் பிரதமரை வரவேற்றனர்.

முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு டத்தோ ஶ்ரீ சஃப்ருல் தெங்கு அப்துல் அசிஸ், வெளியுறவு அமைச்சர் முஹமட் ஹசான், பாகிஸ்தானுக்கான மலேசியத் தூதர் டத்தோ முஹமட் அஸார் மஸ்லான்  ஆகியோரும் பிரதமருடன் இப்பயணத்தில் கலந்து கொண்டனர்.

தமது பயணத்தின் இரண்டாவது நாளில், அன்வார் ஷெபாசுடன் சந்திப்பை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து, இரு நாடுகளின் பிரதிநிதிகள் அடங்கிய இருவழி சந்திப்பை பாகிஸ்தான் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் அவர் மேற்கொள்வார்.

மேலும், பாகிஸ்தானின் தொழில்துறை பிரமுகர்களுடனும் ஒரு வட்டமேசை சந்திப்பை அன்வார் நடத்தவுள்ளார்.

Source : Bernama

#Anwar
#PakistanTrip
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaIndianTalents

Comments are closed, but trackbacks and pingbacks are open.