ஜாசின், 03/10/2024 : உள்துறை அமைச்சு, KDN-இன் கீழுள்ள பாதுகாப்புப் படையின் சில அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களுக்கான உடல் காமிராக்களைப் பயன்படுத்தும் முன்னோடித் திட்டம் குறித்து அவ்வமைச்சு நேர்மறையான கருத்துகளைப் பெற்றுள்ளது.
இந்த முன்னோடித் திட்டம் குறித்து போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் சிலருடன் தாம் கலந்துரையாடிய நிலையில், அவர்களிடமிருந்து நேர்மறை கருத்துகளைப் பெற்றதாக அதன் அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில்
தெரிவித்தார்.
இன்று, மலாக்காவில் மாணவர்களுக்கான தன்னார்வப் படை, Relasis-ஐ தொடக்கி வைத்தப் பின்னர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் செய்தியாளர்களிடம் பேசினார்.
இதன்வழி, போலீஸ் படையின் திறமையையும் அதிகாரத்தையும் அதிகரிக்க முடியும் என்பதால், அப்படை மீது மக்கள் கொண்டுள்ள எதிர்மறை பார்வையை மாற்ற முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
Source : Bernama
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#Malaysia
Comments are closed, but trackbacks and pingbacks are open.