பெர்லிஸ் வெள்ள நிலவரம் : பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு

பெர்லிஸ் வெள்ள நிலவரம் : பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு

கங்கார், 19/09/2024 : பெர்லிஸில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று காலை 10.00 மணி நிலவரப்படி 49 குடும்பங்களை சார்ந்த 147 பேர் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு தற்காலிக நிவாரண மையங்களில்(PPS) பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பெர்லிஸின் சமூக நலத் துறையின் (ஜேகேஎம்) இயக்குனர் கு சிக் கு மாட் ஈசாவின் கூற்றுப்படி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து குடியிருப்பாளர்களும் நான்கு தற்காலிக இடமாற்ற மையங்களில் (பிபிஎஸ்) தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.