கலர்ஸ் ஆப் இந்தியா நிறுவனம் 4வது முறையாக மலேசிய சாதனையாளர்கள் புத்தகத்தில் இடம் பிடித்தது

கலர்ஸ் ஆப் இந்தியா நிறுவனம் 4வது முறையாக மலேசிய சாதனையாளர்கள் புத்தகத்தில் இடம் பிடித்தது

ஜெகூர் பாரு, 26/08/2024 : கலர்ஸ் ஆப் இந்தியா ஏற்பாட்டில் 23/08/2024 முதல் 01/09/2024 வரை தென்கிழக்கு ஆசிய தீபாவளி கொண்டாட்டம் மற்றும் வர்த்தக கண்காட்சி ஜொகூர் பாருவில் உள்ள சூத்ரா வணிக வளாகத்தில் நடைபெறுகிறது.

இந்த வர்த்தக கண்காட்சியை வெற்றிகரமாக நடத்தியதன் மூலம் கலர்ஸ் ஆப் இந்தியா நிறுவனம் மலேசிய சாதனையாளர்கள் புத்தகத்தில் மீண்டும் இடம் பிடித்துள்ளது. ஜொகூர் பாருவில் நடைபெறும் இந்த வர்த்தக கண்காட்சி ”மிகப்பெரிய உட்புற வணிக வளாக தீபாவளி சந்தை” என்கிற வகையில் மலேசிய சாதனையாளர்கள் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. இந்த வர்த்தக கண்காட்சியில் மொத்தம் 217 விற்பனை அரங்குகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த சாதனையை அங்கீகரிக்கும் சான்றிதழ் 24/08/2024 அன்று மலேசிய சாதனையாளர்கள் புத்தக அதிகாரிகளால் கலர்ஸ் ஆப் இந்தியா நிறுவனத்தாருக்கு வழங்கப்பட்டது.

இந்த சாதனை கலர்ஸ் ஆப் இந்தியாவின் நான்காவது சாதனையாகும். இதற்கு முன்னர் மூன்று முறை மலேசிய சாதனையாளர்கள் புத்தகத்தில் கலர்ஸ் ஆப் இந்தியா இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.