நான்கு மாநில தேர்தலை சந்திக்க தயார்நிலையில் காங்கிரஸ் கட்சி தயார்

நான்கு மாநில தேர்தலை சந்திக்க தயார்நிலையில் காங்கிரஸ் கட்சி தயார்

விரைவில் தேர்தல் நடைபெற இருக்கும் நான்கு மாநிலங்களின் காங்கிரஸ் கட்சியின் தேர்வுக் குழு கூட்டம் தில்லியில் உள்ள அனைந்திந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமையகத்தில் 18/08/2024 அன்று நடைபெற்றது. இந்த கூட்டம் காங்கிரஸ் கட்சியில் தலைவர் திரு. மல்லிகார்ஜுன கார்கே, பாராளுமன்ற எதிர்கட்சி தலைவர் திரு. ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியில் பொதுச் செயலாளர்(அமைப்பு) திரு. KC வேணுகோபால் கலந்து கொண்டார்.

எதிர்வருகின்ற தேர்தல்களை சந்திக்க காங்கிரஸ் கட்சி தயார் நிலையில் இருப்பதாக திரு. வேணுகோபால் தனது X தளத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தில் தேர்தல் நடைபெற இருக்கும் நான்கு மாநிலங்களின் பொதுச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் தேர்வுக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.