டத்தோ ஸ்ரீ படுகா டாக்டர் மைமூனா முகமது ஷாரிப் கோலாலம்பூரின் புதிய மேயர்

டத்தோ ஸ்ரீ படுகா டாக்டர் மைமூனா முகமது ஷாரிப் கோலாலம்பூரின் புதிய மேயர்

டத்தோ ஸ்ரீ படுகா டாக்டர் மைமூனா முகமது ஷாரிப் கோலாலம்பூரின் புதிய மேயராக வியாழன் (ஆகஸ்ட் 15) முதல் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் கட்டாய ஓய்வு பெற்ற டத்தோ கமருல்ஜமான் மாட் சாலேவுக்குப் பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார்.
​​நகர்ப்புற திட்டமிடல் மற்றும் சமூக மேம்பாட்டில் ஏறக்குறைய நான்கு தசாப்தங்களாக அவரது அனுபவத்தின் அடிப்படையில் கோலாலம்பூர் நகர மண்டபத்தை (DBKL) வழிநடத்த அவர் தகுதியான நபர் என பிரதமர் தெரிவித்தார்.மேலும் டாக்டர் மைமூனா உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல்வேறு நிறுவனங்களை வழிநடத்திய அனுபவம் பெற்றவர்.