செலாயாங் நகராட்சி கழகத்தின் சுகந்திரத் தின கொண்டாட்டம்

செலாயாங் நகராட்சி கழகத்தின் சுகந்திரத் தின கொண்டாட்டம்

சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு செலாயாங் நகராட்சி கழகத்தின் ஜாலூர் ஜெமிலாங் பறக்கும் பிரச்சாரம் மற்றும் மாதாந்திர ஒன்றுகூடல் நிகழ்வு 12 ஆகஸ்ட் 2024 அன்று டதாரன் எம்பிஎஸ் மைதானத்தில் நடந்தது.

ஜலூர் ஜெமிலாங்கை குடியிருப்பு மற்றும் அலுவலக வளாகங்களில் பறக்கவிட்டு சுதந்திர உணர்வை உயர்த்த வேண்டுமெனும் பிரதமரின் வேண்டுகோளுக்குகிணங்க செலாயாங் நகராட்சி கழக உறுப்பினர்களுக்கு ஜாலூர் ஜெமிலாங் வழங்கும் நிகழ்ச்சியும் இந்நிகழ்வில் நடைபெற்றது.

திரு.ஷாமான் ஜலாலுதீன் செலாயாங் நகராட்சி கழகத்தின் தலைவர் YDP தனது உரையில், அனைத்து ஊழியர்களும் கொண்டாட்டத்தின் கருப்பொருளான ‘”ஜிவா மெர்டேகா”வை கொண்டாடுவது மட்டுமின்றி, சுதந்திரம், ஒற்றுமை மற்றும் உறுதிப்பாடு ஆகியவற்றின் மதிப்புகளை தங்கள் அன்றாடப் பணிகளைச் செய்வதில் பயன்படுத்தவும் அழைப்பு விடுத்தார்.

மேலும் இந்நிகழ்வில் துவான் ஹாஜி அஸ்ஹர் பின் சம்சூரி, எம்.பி.எஸ் துணைச் செயலாளர், பல்வேறுதுறை இயக்குநர்கள் மற்றும் எம்.பி.எஸ் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.