ஒலிம்பிக்ஸ்: இறுதிச்சுற்றில் இந்திய வீராங்கனை தகுதிநீக்கம்

ஒலிம்பிக்ஸ்: இறுதிச்சுற்றில் இந்திய வீராங்கனை தகுதிநீக்கம்

பாரிஸ் ஒலிம்பிக்ஸில் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் இறுதிச்சுற்றிற்கு தேர்வாகியிருந்தார். 50 கிலோ எடை பிரிவில் விளையாடி வந்தார். நேற்று முன்தினம் இரவு இவரது உடல் எடை 52 கிலோ இருந்ததால் உணவு, தண்ணீர் உட்கொள்ளாமல் விடிய விடிய உடற்பயிற்சி செய்தார். இறுதிச்சுற்றன்று உடல் எடை 100 கிராம் அதிகமாக இருந்ததால் இவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அவருக்கு எந்த பதக்கமும் கிடைக்க வாய்ப்பில்லை. மல்யுத்த விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக வினேஷ் மன வருத்தத்துடன் அறிவித்தார். இந்திய விளையாட்டுக்கு இது பேரிழப்பாகும்.