பிரதமர் அலுவலகம் மெட்டா ‘Meta Platform Inc’ பிரதிநிதிகளுடன் சந்திப்பு.

பிரதமர் அலுவலகம் மெட்டா 'Meta Platform Inc' பிரதிநிதிகளுடன் சந்திப்பு.

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்ய பட்ட பாலஸ்தீன் விவகாரம் தொடர்பான பதிவுகள் நீக்கியதன் தொடர்பாக இச்சந்திப்பு நடத்தப்பட்டது.தொடர்பு துறை அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சிலும் இச்சந்திப்பில் கலந்து கொண்டார்.

பிரதமர் மட்டுமின்றி மலேசிய மக்களும் மெட்டாவின் இந்த செயலினால் அதிருப்தியில் இருக்கின்றனர்.

மெட்டா தரப்பு போதிய விளக்கங்கள் வழங்குவது மட்டுமன்றி பொது மன்னிப்பு கேட்க வேண்டுமென பிரதம துறை அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.