ஜனவரி 06, மத்திய ஆயுத போலீஸ் படைகளில் பெண்களுக்கு வேலை வாய்ப்பு மேம்படுத்தும் வகையில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் மத்திய தொழிலக பாதுகாப்பு படை ஆகியவற்றில் 33 சதவீத இடஒதுக்கீடும் எல்லை பாதுகாப்பு படை, சகஸ்திர சீமா பால், இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் ஆகிய எல்லை படை பணிகளுக்கு 15 சதவீத இடஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.






