சபரிமலை அய்யப்பன் கோவிலை தேசிய புனித தலமாக்க வேண்டும்
நவம்பர் 30, சபரிமலையில் மண்டல பூஜைக்காக கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. அய்யப்பன் கோவிலை தேசிய புனித தலமாக்க வேண்டும் என கேரள தேவசம்போர்டு மந்திரி சிவக்குமார் கூறினார். இதற்காக கடந்த ஆண்டு முதல்வர் உம்மன்சாண்டியும், நானும் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தோம். மீண்டும் பிரதமரிடம் நேரில் வற்புறுத்த உள்ளோம். இந்த வருடம் ரூ.70 கோடி வளர்ச்சி பணிகளுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. மேலும் கேரள அரசு பட்ஜெட்டிலும் ரூ.65 கோடி ஒதுக்கப்பட்டது.