விக்ரமுக்கு ஜோடியாக நயன்தாரா

Online-Tamil-News-Malaysia

Online-Tamil-News-Malaysia

நவம்பர் 23, விக்ரம் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் ‘பத்து எண்றதுக்குள்ள’. இப்படத்தை விஜய் மில்டன் இயக்கியிருந்தார். இப்படத்தை தொடர்ந்து விக்ரம், ‘அரிமா நம்பி’ இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இப்படத்திற்கு ‘மர்ம மனிதன்’ என்று தலைப்பு வைத்துள்ளதாகவும் கூறப்பட்டது. இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்க காஜல் அகர்வாலிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், தற்போது காஜல் அகர்வாலுக்கு பதிலாக நயன்தாரா இப்படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தமாகியுள்ளார். இதனை, இயக்குனர் ஆனந்த் சங்கர் உறுதிபடுத்தியுள்ளார். விக்ரமும்-நயன்தாராவும் இணையும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை எஸ்.கே.டி. ஸ்டுடியோஸ் சார்பில் சிபு தமீன்ஸ் தயாரிக்கிறார். இவர் ஏற்கெனவே, விஜய் நடிப்பில் வெளிவந்த ‘புலி’ படத்தை தயாரித்தவர். மேலும், அனிருத் இசையமைக்கவுள்ளார். நடிகை பிந்துமாதவியும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.