சென்னையில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

Online-Tamil-News-Malaysia

Online-Tamil-News-Malaysia

நவம்பர் 2, கன மழை காரணமாக சென்னையில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், கடந்த அக்டோபர் 28ஆம் தேதி முதல் தென் கிழக்கு பருவ மழை தொடங்கியது. இதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.சென்னையில், நேற்று பகல் 1 மணி முதல் லேசான மழை பெய்ய தொடங்கியது. பிறகு மாலை 5 மணிக்கு மேல், சில இடங்களில் கன மழை பெய்தது. இதற்கிடையில், இன்றும் கன மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், கன மழை காரணமாக சென்னையில் இன்று (நவ.2) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்னை மாவட்ட கலெக்டர் விடுமுறை அறிவித்துள்ளார்.தற்போது சென்னையில் சில இடங்களில் வானம் மேகத்துடனும், சில இடங்களில் லேசா தூரல் மழையும் பெய்து வருகிறது.