நைஜீரியாவின் தற்கொலைப்படை தாக்குதலில் 42 பேர் பலி

Online-Tamil-News-Malaysia

Online-Tamil-News-Malaysia

அக்டோபர் 16, நைஜீரியாவின் மைடுகுரியில் மோலாய் என்ற பகுதியில் உள்ள மசூதியில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 42 பேர் உடல் சிதறி பலியாகினர். தொழுகை நடந்து கொண்டிருந்தபோது, உடலில் வெடிபொருட்களுடன் மசூதிக்குள் வந்த ஒரு மர்மநபர் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச்செய்தான். அடுத்த சில நிமிடங்களில் மேலும் ஒருவன் தனது உடலில் இருந்த குண்டுகளை வெடிக்க வைத்தான். இந்த தாக்குதலில் மசூதி கட்டிடம் முற்றிலும் இடிந்து தரைமட்டமாகிப் போனது.