வீடு வீடாக சென்று ஓட்டு கேட்கின்றனர் சரத்குமார் விஷால் அணிகள்

Online-Tamil-News-Malaysia

Online-Tamil-News-Malaysia

அக்டோபர் 16, நடிகர் சங்க தேர்தல் நாளை மறுநாள் நடக்கிறது. சரத்குமார், விஷால் அணிகள் மோதுகின்றன. தேர்தலில் ஓட்டுபோட தகுதி உள்ளவர்களாக 3,139 பேர் உள்ளனர். இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நாடக நடிகர்-நடிகைகள்.

சரத்குமார் அணிக்கு ஆதரவு திரட்ட நடிகை ஸ்ரீப்ரியா தலைமையில் நடிகைகள் வீடு வீடாக செல்கிறார்கள். நடிகர்களும் தனி குழுவாக சென்று ஓட்டு கேட்கிறார்கள். விஷால் அணியை சேர்ந்த ரோகிணி, பிரசன்னா, நந்தா, ரமணா உள்ளிட்டோர் வீடு வீடாக சென்று ஓட்டு கேட்கின்றனர்.