சினிமாவில் நுழைவதற்கு முன்பு சந்தித்த பிரச்சினைகளை மனம் திறந்த கங்கனாரணவத்

சினிமாவில் நுழைவதற்கு முன்பு சந்தித்த பிரச்சினைகளை மனம் திறந்த கங்கனாரணவத்

10

செப்டம்பர் 11, நடிகை கங்கனாரணவத் சினிமாவில் நுழைவதற்கு முன்பு சந்தித்த பிரச்சினைகளை மனம் திறந்து கூறுனார். ஒரு சிறிய நகரத்தில் இருந்து நான் மும்பை வந்தேன். ஆரம்ப காலத்தில் பலமுறை பஸ்சிலும், ரெயிலிலும், டாக்சியிலும், நடந்தும் கூட வந்திருக்கிறேன். நான் பல பிரச்சனைகளை சந்தித்து இருக்கிறேன். சிலர் மீது போலீசிலும் புகார் கொடுத்திருக்கிறேன். எனக்கு மும்பையில் வீடு இல்லாத போது பிளாட்பாரத்தில் கூட படுத்து தூங்கி இருக்கிறேன். அதன் பிறகு 2008 மற்றும் 2014ஆம் ஆண்டு ஜனாதிபதியிடம் 2 முறை தேசிய விருது பெற்று சினிமாவில் அதிக சம்பளம் வாங்குகிறேன். எனக்கு ஏற்பட்ட தடைகளை வரமாக எடுத்துக் கொண்டேன். நீங்களும் உங்களை நேசியுங்கள். மற்றவர்களைப் போல் இல்லை என்பதற்காக வருத்தப்படாதீர்கள். நிச்சயம் சாதிக்க முடியும் என்று கூறினார்.