சிரியாவில் உள்நாட்டு போர் இதுவரை 2.40 லட்சம் பேர் பலி

சிரியாவில் உள்நாட்டு போர் இதுவரை 2.40 லட்சம் பேர் பலி

isis

செப்டம்பர் 7, சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கும், கிளர்ச்சி படையினருக்கும் இடையே நடந்த  சண்டையில் 47 பேர் உயிரிழந்தனர். கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் மோதலில் சுமார் 2.40 லட்சம் பேர் உயிரிழந்து விட்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. சிரியாவில் இருந்து தப்பி அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் அளவுக்கு நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. தீவிரவாதத்தை ஒடுக்க சிரியா அரசுடன், அமெரிக்க  கூட்டுப்படையும் இணைந்து செயல்பட்டு வருகிறது. ஆனாலும் மோதல் அதிகரித்து கொண்டேதான் செல்கிறது.