தலைகீழாக கட்டி 4 பேரை எரித்த ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள்

தலைகீழாக கட்டி 4 பேரை எரித்த ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள்

isis1

செப்டம்பர் 1, ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் ஈராக்கில் 4 பேரை உயிருடன் எரித்துக் கொலை செய்த வீடியோ காட்சியை இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். இதில் கொல்லப்பட்ட 4 பேரும் சங்கிலியால் பிணைக்கப்பட்டு, தலைகீழாக கட்டி தொங்கவிடப்பட்ட நிலையில் எரித்துக் கொல்லப்பட்டுள்ளனர். 400 கி.மீ., தொலைவிலுள்ள ருட்பா என்ற நகரில் எடுக்கப்பட்டுள்ளது. ருட்பா நகரம் தற்போது ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் வசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.