200 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து

200 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து

KPN photo

மே 19, சேலம் மாவட்டம், கண்ணன்குறிச்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 18 பேர் கடந்த சனிக்கிழமை கேரள மாநிலம் மூணாறுக்கு மினி பஸ்சில் சுற்றுலா வந்தனர். பஸ்சை டிரைவர் கோபி ஓட்டி வந்தார். நேற்று காலை 7 மணியளவில் மூணாறில் இருந்து கொச்சின் புறப்பட்டனர். கொச்சின் – தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் கரடிப்பாறை பகுதியில், எதிரே வந்த வாகனத்திற்கு வழி கொடுக்க மினி பஸ்சை டிரைவர் சாலையோரம் ஒதுக்கினார். இதில் எதிர்பாராதவிதமாக, 200 அடி பள்ளத்தில் ஏலத்தோட்ட பகுதியில் பஸ் கவிழ்ந்தது.