இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் கொலை மிரட்டல்

இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் கொலை மிரட்டல்

rahuram

ஏப்ரல் 16, இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநராக உள்ள ரகுராம் ராஜனுக்கு, ஐ.எஸ். தீவிரவாதிகள் சார்பில் கொலை மிரட்டல் இ-மெயில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இம்மாத தொடக்கத்தில் isis583847@gmail.com என்ற இ-மெயில் முகவரியிலிருந்து ராஜனுக்கு இந்த கொலை மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த இ-மெயிலில் என்ன எழுதப்பட்டிருந்தது என்பது முழுமையாக தெரியவில்லை.

அமெரிக்காவில் உள்ள கூகுள் தலைமையகத்திற்கு இ-மெயில் எங்கிருந்து வந்தது என்ற தகவலை அளிக்கும்படி காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது. முதற்கட்டமாக கிடைத்துள்ள தகவலின் படி இந்தியாவுக்கு வெளியே இருந்து இந்த இ-மெயில் அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.