நைஜீரியாவில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு

நைஜீரியாவில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு

(1)TURKEY-IZMIR-CAR BOMB BLAST

மார்ச் 9, நைஜீரியாவில் நேற்று முன்தினம் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. பாகா மீன் சந்தைக்குள் 3 சக்கர மோட்டார் சைக்கிளுடன் புகுந்த மர்ம ஆசாமி வெடிகுண்டை வெடிக்கச்செய்தார்.  சிறிது நேரம் கழித்து திங்கள்சந்தை என்ற மற்றொரு சந்தையில் குண்டுவெடித்தது. அடுத்த ஒரு மணி நேரம் கழித்து மாநில பாதுகாப்பு துறை அலுவலகம் அருகில் ஒரு குண்டு வெடித்து. இந்த தொடர் குண்டுவெடிப்பில் 50 பேர் பலியாகினர். 36 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்கு போகோ ஹரம் தீவிரவாதிகள் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.