தாய்,தந்தையை துப்பாக்கியால் சுட்ட மகன்

தாய்,தந்தையை துப்பாக்கியால் சுட்ட மகன்

9

பிப்ரவரி 3, அமெரிக்காவில் நியூ மெக்சிகோ மாகாணத்தை சேர்ந்த பெற்றோர் தனது 3 வயது மகன் மற்றும் 2 வயது மகளுடன் அல்புகுயர் கியூ நகரில் உள்ள ஓட்டலில் தங்கியிருந்தனர். அங்கு குழந்தைகள் இருவரும் விளையாடிக் கொண்டிருந்தனர்.அப்போது 3 வயது சிறுவன் தனது தாயாரின் கைப்பையில் வைத்து இருந்த ஐ பேடை தேடிகொண்டு இருந்தான் அப்போது அவனுக்கு தயார்வைத்து இருந்த கைத்துப்பாக்கி கிடைத்தது. அதை வைத்து சிறுவன் விளையாடி கொண்டிருந்தான்.பின்னர்,சிறுவன் விளையாட்டு தனமாக தாய் மற்றும் தந்தையை நோக்கி துப்பாக்கியால் சுட்டான். உடனே அதிலிருந்து  பாய்ந்த துப்பாக்கி குண்டுகள் வெளியேறி தந்தையின் இடுப்பு பகுதியில் பாய்ந்தது.அதே குண்டு அருகில் இருந்த தாயாரின் தோள்பட்டையில் பாய்ந்தது. பின்னர்தீவிர சிகிச்சைக்கு பிறகு தந்தை ‘டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தாயாருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. துப்பாக்கி குண்டு பாய்ந்த தாயார் தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளார்.