விரைவில் புதுப்பட வேலைகளை துவங்கும்: செல்வராகவன்

விரைவில் புதுப்பட வேலைகளை துவங்கும்: செல்வராகவன்

Director Selvaraghavan Photos Pictures Stills

‘காதல் கொண்டேன்’, 7ஜி ரெயின்போ காலனி’, ‘புதுப்பேட்டை’ ஆகிய படங்களை இயக்கியவர் செல்வராகவன். அப்படங்களைத் தொடர்ந்து ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘மயக்கம் என்ன’ படங்களை இயக்கினார். வித்தியாசமான கதையும், திரைக்கதையும் அமைத்து இயக்கும் செல்வராகவன் கடைசியாக ஆர்யா- அனுஷ்கா ஜோடியாக வைத்து ‘இரண்டாம் உலகம்’ படத்தை இயக்கினார்.

இப்படம் அதிகம் வரவேற்பு பெறாததால் இப்படத்துக்குப் பிறகு செல்வராகவன் படங்கள் எடுக்காமல் ஒதுங்கி இருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது புது படத்துக்கான கதையை உருவாக்கியுள்ளார். விரைவில் இப்படத்திற்கான வேலைகளை துவங்கவுள்ளதாக தெரிகிறது. செல்வராகவனே இப்படத்தை தயாரிப்பார் என்ற தகவலும் வந்துள்ளது.