ஜனவரி 3, ஜாங்மி எனப்படும் வெப்பமண்டல புயல், சுலு கடற்பகுதியில் நேற்று இரவோடு ஓய்ந்து விட்டதாக மலேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மலேசிய வானிலை மையம் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் ஜாங்மி புயல்காற்று இறுதியாக சபா, சண்டகானிலிருந்து 527 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பகுதிகளில் வீசியதாகக் கூறப்படுகிறது.
இதில், பகாங், குவா மூசாங் பகுதி வெள்ளத்தினால் மக்கள் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் 50 தன்னார்வலர்கள் முன் வந்துள்ளனர்.





