கொடைக்கானலில் தொடர் மழையால் வெள்ளப் பெருக்கு

கொடைக்கானலில் தொடர் மழையால் வெள்ளப் பெருக்கு

6

 

கொடைக்கானலில் கடந்த சில நாட்களாகவே மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு பெய்யத் துவங்கிய மழை பரவலாக அனைத்துப் பகுதிகளிலும் கொட்டித் தீர்த்தது.இரவிலும் கொட்டித் தீர்த்த மழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. வெள்ளி நீர்வீழ்ச்சி, பாம்பார் நீர்வீச்சி மற்றும் சிறிய அருவிகளிலும் மழை நீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது.