பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம்

பிரதமருக்கு தமிழக முதல்வர்  கடிதம்

5

ஈரானில் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.அந்த கடிதத்தில்கட்டாரில் மீன்பிடிக்கும் நிறுவனத்தில் பணியாற்றச் சென்ற கன்னியாகுமரியைச் சேர்ந்த 4 மீனவர்கள், கட்டார் – ஈரான் கடற்பரப்பில் கடந்த 22ம் தேதி மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அவர்கள் சென்ற படகு பழுதாகி ஈரான் கடற் எல்லைக்குள் சென்றுவிட்டது.அப்போது அங்கு வந்த ஈரான் கடற்படையினர், 4 தமிழக மீனவர்களையும் சிறைபிடித்துச் சென்றனர்.ஈரானின், கிஷ் தீவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ள 4 தமிழர்களையும் உடனடியாக மீட்டு தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.