கோலாலம்பூர், 07 செப்டம்பர் 2026 : சுகம் கர்நாடிகா ஏற்பாட்டில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெறும் 10 நாள் கோவில் ஊர்வலத்தின் முதல் நாள் நிகழ்ச்சி பிரிக்ஃபீல்ட்ஸில் உள்ள ஸ்ரீ சக்தி கற்பக விநாயகர் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்றது. பக்தி, இசை மற்றும் சமூக ஒற்றுமையுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவர்கள், பெற்றோர்கள், குடும்பத்தினர் மற்றும் நலன் விரும்பிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
10 நாட்களில் 10 ஆலயங்களைச் சென்றடையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஆன்மிகப் பயணத்தின் முதல் நாள் நிகழ்ச்சி சிறப்பாக நிறைவடைந்ததாக சுகம் கர்நாடிகா தெரிவித்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக, இரண்டாம் நாள் ஊர்வலம் செப்டம்பர் 6ஆம் தேதி இரவு 8 மணிக்கு ராவாங்கில் உள்ள ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெற உள்ளது. குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பொதுமக்களும் இதில் கலந்து கொள்ளலாம் என ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.







