கோலாலம்பூர், 06 செப்டம்பர் 2026 : SMC Brickfields பள்ளியின் 6ஆம் ஆண்டு மாணவி வாக்ஷரா வி. குமரன், 2026ஆம் ஆண்டுக்கான Pertandingan Pembaca Bestari – Anugerah Tokoh NILAM Kebangsaan போட்டியில் தேசிய அளவில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். வாசிப்பின் மீதான ஆர்வம், தொடர் முயற்சி மற்றும் அர்ப்பணிப்புடன் போட்டியில் பங்கேற்ற வாக்ஷராவின் இந்தச் சாதனை பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளதாக SMC Brickfields தெரிவித்துள்ளது.
தேசிய அளவில் சிறப்பிடம் பெற்ற வாக்ஷராவுக்கு பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.








