புதுச்சேரி, 06 செப்டம்பர் 2026 : புதுச்சேரி, வில்லியனூர் சிவன் கோவிலில் செப்டம்பர் 6ஆம் தேதி மாலை 5 மணிக்கு, நடன சாஸ்த்ராலயா நடனப் பள்ளி மாணவர்கள் வித்தியாசமான பரதநாட்டிய நிகழ்ச்சியை நடத்த உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் தலைகீழாக வைக்கப்பட்ட மண்பானையின் மீது தொடர்ந்து 20 நிமிடங்கள் பரதநாட்டியம் ஆடி, இந்திய சாதனைப் புத்தகத்தில் இடம்பெறுவதற்கான சாதனை முயற்சியை மேற்கொள்ள உள்ளனர்.
இறைவன் மற்றும் குருமார்களின் ஆசியுடன் இந்தச் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. பரதநாட்டியக் கலையில் மாணவர்களின் திறமையையும், அவர்களின் சமநிலை மற்றும் விடாமுயற்சியையும் வெளிப்படுத்தும் வகையில் இந்தச் சாதனை முயற்சி அமையவுள்ளது.



வழக்கமான முறையிலிருந்து மாறுபட்டு, தலைகீழ் மண்பானையின் மீது பரதநாட்டியம் ஆடும் இந்த நிகழ்ச்சி பார்வையாளர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சிறப்பு நிகழ்ச்சியைக் காணவும், மாணவர்களின் சாதனை முயற்சிக்கு ஆதரவு அளிக்கவும் பொதுமக்கள் அனைவரும் வருகை தருமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.







