கோலாலம்பூர், 04 செப்டம்பர் 2026 : நேபாளத்தின் ராசுவா பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மலேசிய இந்து தர்ம மாமன்றமும், பங்சார் அருள்மிகு ஸ்ரீ இராமலிங்கேஸ்வரர் ஆலயமும் இணைந்து கூட்டுப் பிரார்த்தனையை ஏற்பாடு செய்தன.
கடந்த செப்டம்பர் 2-ஆம் தேதி மாலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பங்சாரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ இராமலிங்கேஸ்வரர் ஆலயத்தில் இக்கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது.
நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவால் உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடையவும், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் சமூகங்களுக்கு மனவலிமையும் ஆறுதலும் கிடைக்கவும் பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிகழ்வில் இந்து சமயத் தலைவர்கள், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு நேபாள மக்களுக்கு தங்களது ஆதரவையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்தினர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையும் வலிமையும் கிடைக்க வேண்டி அனைவரும் ஒன்றிணைந்து பிரார்த்தனை செய்தனர்.







