என் தமிழ்

கிரானைட் கடத்தல்:பி.ஆர்.பி. நிறுவனம் மீது வழக்கு

6

அரசின் அனுமதியின்றி கிரானைட் கற்களை வெட்டி எடுத்து கடத்தியது தொடர்பான வழக்கில் பி.ஆர்.பி. நிறுவனர் மற்றும் அவரது மகன் சுரேஷ்குமார் உள்ளிட்ட 6 பேர் மேலூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர்.மதுரையை அடுத்த மேலூரில் பட்டா நிலங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கிரானைட் கற்களை அரசுடைமை ஆக்கக் கோரி மதுரை ஆட்சியர் தாக்கல் செய்த வழக்கின் நகலை பெற்றுக் கொண்டனர்.இந்த வழக்கின் விசாரணை வரும் 30ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Scroll to Top