புதுடெல்லி, 25 ஜூலை 2026 : நாடு முழுவதும் நீட் தேர்வு முறைகேடு மற்றும் கல்வி அமைப்பில் சீர்திருத்தம் கோரி நடைபெற்ற மாணவர் போராட்டங்களின் பின்னணியில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கு தனது ராஜினாமா கடிதத்தை அவர் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனது ராஜினாமா கடிதத்தில், மாணவர்களின் எதிர்காலம் மற்றும் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே இந்த முடிவை எடுத்ததாக தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். மேலும், நாட்டின் ஒற்றுமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதையும், மாணவர்கள் போராட்டங்கள் மற்றும் சட்டச் சிக்கல்களில் சிக்காமல் தங்களது கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த சில வாரங்களாக ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (CJP), மாணவர் அமைப்புகள் மற்றும் பல்வேறு தரப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு, தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை முக்கிய கோரிக்கையாக முன்வைத்திருந்தனர். அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளிலும் இதுவே பிரதான கோரிக்கையாக வலியுறுத்தப்பட்டது.
தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை மாணவர் இயக்கங்கள் தங்களது முதல் பெரிய வெற்றியாக வரவேற்றுள்ளன. இருப்பினும், நீட் தேர்வு முறைகேட்டால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீதி, தேர்வு சீர்திருத்தம் மற்றும் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுவது உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேறும் வரை தங்களது போராட்டம் தொடரும் என CJP மற்றும் மாணவர் பிரதிநிதிகள் அறிவித்துள்ளனர்.






