கோலாலம்பூர், 27 மே 2026 : மலேசியாவில் இன்னும் கச்சா எண்ணெய் வளங்கள் இருப்பதாகவும், ஆனால் அவற்றை கண்டறியும் மற்றும் பிரித்தெடுத்தல் செய்யும் ஆய்வு பணிகள் தற்போது அதிக சவாலான மற்றும் சிக்கலான நிலையை எட்டியுள்ளதாக பெட்ரோனாஸ் தெரிவித்துள்ளது.
உலகளாவிய எரிசக்தி மாற்றம், குறைந்த கார்பன் பயன்பாட்டிற்கான அழுத்தம், தொழில்நுட்ப முன்னேற்றத் தேவைகள் மற்றும் அதிகரித்து வரும் செயல்பாட்டு செலவுகள் ஆகியவை எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு நடவடிக்கைகளை மேலும் சிக்கலாக்கி வருவதாகவும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
பெட்ரோனாஸ் வெளியிட்டுள்ள 2024–2026 செயற்பாட்டு முன்னோக்கு அறிக்கையின் படி, நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதற்காக புதிய தொழில்நுட்பங்கள், குறைந்த கார்பன் தீர்வுகள் மற்றும் மேம்பட்ட ஆய்வு முறைகள் மீது அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
மேலும், எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் நிலைத்தன்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் கார்பன் வெளியீட்டை குறைக்கும் முயற்சிகளும் எதிர்கால வளர்ச்சிக்கான முக்கிய அம்சங்களாக மாறியுள்ளதாக பெட்ரோனாஸ் தெரிவித்துள்ளது.
அதேவேளை, நாட்டின் எரிசக்தி தேவைகளை தொடர்ந்து பூர்த்தி செய்வதற்காக, புதிய கள ஆய்வுகள், கடல்சார் வளங்கள் மற்றும் மாற்று எரிசக்தி முயற்சிகளில் பெட்ரோனாஸ் தொடர்ந்து முதலீடு செய்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.





